Friday, November 14, 2008
சென்னை சட்டக்கல்லூரி மோதல் -- எனது பார்வை
நீண்ட நாட்களுக்கு (1 வருடம்) பிறகு இரவு பணிக்கு சென்றுவிட்டு அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பிய நான் சென்னை சட்டக்கல்லுரி மாணவர்களிடையேயான மோதலை தொலைக்காட்சியில் காண நேரிட்டது. Animal Planet channel தான் பார்க்கிறோமோ என்று மனப்பிரமை!(?)
இது சென்னை சட்டக்கல்லூரியா அல்லது சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாத கல்லூரியா??
தமிழ் சினிமா சண்டை காட்சிகளை விட மயிர் கூச்செறிய வைக்கும் அளவுக்கு பிரமாண்டமான, அதேசமயம் பிரமிக்கவைக்கும் நிஜ காட்சிகள்... போலீஸ் பாதுகாப்புடன் (இடையில் வெளி ஆட்கள் புகுந்துவிடகூடாது அல்லவா) தொலைக்காட்சி & பத்திரிக்கை கேமிராக்களுக்கு மத்தியில் நடைப்பெற்ற புனித போர் (jihaath).
இப்பிரச்சினை குறித்த எனது தாழ்மையான கருத்துக்களை இங்கு பதிய விரும்புகிறேன்!!!
1. கல்லூரி நிலவரத்தை முன்னரே அறிந்தும், அதனை கண்டுகொள்ளாமல் இருந்த கல்லூரி முதல்வரும், அந்த கல்லூரி நிர்வாகமும்தான் முதலில் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள்...
விளையும் (நச்சு) பயிரை முளையிலே களைய தவறியது. ஒழுங்கீனமான மாணவர்களை ஆரம்பத்திலேயே ஏன் கட்டுபடுத்தவில்லை?
2. இத்தகைய வன்முறை வெறியை இவர்களுக்குள் விதைத்தது யார்? மனிதர்களை விலங்குகளிடமிருந்து பிரித்துக்காட்டும் பகுத்தறிவை இப்படி ஆயுதங்களை தூக்கி மற்றவர்களை அழிக்கப்பயன்படுத்துவது?
சட்டம் படித்து Criminal lawyer-களாக(வும்) வரவேண்டியவர்கள் இன்று சட்டத்தின் முன் Criminal-களாக நிற்கின்றனர்?
3. குற்றத்தை தடுக்க வேண்டிய காவல் துறை, வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது என்ற குற்றசாட்டை இந்த சம்பவத்தில் நான் ஏற்று கொள்ளமாட்டேன்.
மேலிட உத்தரவு, பொறுப்பற்ற கல்லூரி நிர்வாகம் என்ற இரண்டுக்கும் நடுவில் அவர்கள் இருதலை கொள்ளி எறும்புகள்... நடப்பது மாணவர்களிடையேயான ஒரு வீர விளையாட்டு (????) இதில் எப்படி அவர்கள் குறுக்கிட முடியும் ? கல்லூரி நிர்வாகமோ பிரச்சினையின்போது காவல் துறையை கல்லுரிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
மீறி நுழைந்திருந்தால்.... கல்லூரி வளாகத்துக்குள் போலீஸ் அராஜகம்! மாணவர்கள் மீது தடியடி! தமிழகம் முழுதும் மாணவர்கள் கொந்தளிப்பு! வகுப்பு புறகணிப்பு போராட்டம்! --- என பிரச்சினையே வேறு மாதிரி திசை மாறி இருந்திருக்கும் என்பதை உங்களால் மறுக்க முடியுமா????????
வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம்! குறைந்தபட்சம் வானை நோக்கி சுட்டாவது நிலைமையை கட்டுப்படுத்திருக்கலாம்??! அதற்கும் மேலிட அனுமதி கிடைத்திருக்காது போலும் (கள்ள துப்பாக்கி வைத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த அவர்களென்ன சாமி படத்தில் வரும் விக்ரமா??)
" மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி" - என்பதுதான் அவர்களின் இன்றைய பரிதாபநிலை!!!
4. இதனை தொடர்ந்து மாநிலத்தின் இதர சட்டக்கல்லூரிகளில் நடந்தேறிய சம்பவங்கள் (கோவை) ... வார்த்தைகளால் விவரிக்க முடியாத கேவலம்!!!!
தங்கள் கல்லூரி வகுப்பறைகளை உடைத்து துவம்சம் செய்கின்றனர்... (என்ன கொடுமை சார் இது)
பால் புகட்டிய அன்னையின் மார்.... மன்னிக்க வேண்டும்! இந்நிகழ்வுகளுக்காக என்னை இழிவுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை...
5. விசாரணைக் கமிஷன்.... (என்ன பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல!)
முன்னாள் நீதியரசர்களின் தலைமையில் ஆண்டுக்கு சிலமுறை இது போன்ற விசாரணைக் கமிஷன்களை பார்த்து அலுத்து போய்விட்டது.. இதற்காக விசாரணைக் கமிஷனை குறை கூறவில்லை.
இன்னும் , நாடெங்கும் தினசரி இது போன்ற கொடுமைகளும் வன்முறைகளும் தொடர்ந்து ஒரு முடிவிலியாக நடந்து கொண்டுதானே இருக்கின்றன என்ற ஆதங்கம்தான்!!!!!!>>>>>>>?????????
Subscribe to:
Posts (Atom)

