Sunday, September 21, 2008

orkut



Where the New Relat!onsh!p Begins....


I Lve Orkut...
(It makes my days beautiful on this days)



நட்பின் புதிய மொழி....!


இதயங்கள் இணையும் சங்கமம்...!


இனிய உறவுகளின் உறைவிடம்...!



எங்கோ பிறந்தோம்! எங்கோ எங்கோ வளர்ந்தோம்!
இங்கே சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்!
முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை!
எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை!
அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக் கொள்வோம்!
பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம்!
சீக்கிரத்திலேயே சமாதானத்திற்கு வருவோம்!
இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்!
உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க நம்பிக்கை தருவோம்!
நன்மைகள் வளர முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து சாதிப்போம்......



ரயில் பயணங்களில்....






நீங்கள் இதுவரை எத்தனையோ முறை ரயிலில் பயணம் செய்திருப்பிர்கள், சில இனிய உறவுகளுடன் (மனைவி, குழந்தைகள், நட்பு, காதல் என).... நானும் தான்!

என் தந்தையுடன் இறுதியாக நான் மேற்கொண்ட அந்த ஒரு ரயில் பயணம் பற்றிய அனுபவம் தான் என்னுடைய இந்த பதிவு... அந்த ஒரு நாள்..?????

06 செப்டம்பர் 2006...

ஊரில் மாமாவின் (அப்பாவின் அக்கா கணவர்) உடல்நிலை மோசமாக உள்ளதாக வந்த தகவலையடுத்து என்னிடம் கூட சொல்லாமல் (சகோதர பாசம்!), இரவில் திடீரென்று ஊருக்கு கிளம்பிவிட்டார்.

பொழுதும் விடிந்தது... புதன் பிறந்தது (07 செப்டம்பர்)

காலையிலேயே ஊரிலிருந்து போன்: "மாமா இறந்துவிட்டார்? அப்பாவை வர சொல்லவும் என்று?" அப்பாதான் நேற்று இரவே கிளம்பிவிட்டாரே ... இன்னுமா போய் சேரவில்லை??

அப்பா எங்கே? .... மதியம் நான் வேலைக்கு கிளம்பும் வரை அவரை பற்றிய தகவல் எதுவும் வரவில்லை.. சரி சக்கரை நோயாளி ... அடிக்கடி மயக்கம் வேறு வரும். . வழியில் ஓய்வு எடுத்துவிட்டு ஊருக்கு போவார் என்று நினைத்த வேளையில் எனக்கு தொலைபேசி அழைப்பு. நாங்கள் ........... மருத்துவமனையில் இருந்து கூப்பிடுகிறோம். உங்களது அப்பா தரையில் விழுந்து (பயங்கரமாக?) அடிபட்டு உள்ளதாகவும், உடனே கிளம்பி வரவும் என்றது.

இரவோடு இரவாக நானும் ஊருக்கு கிளம்பினேன். குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்கு சென்று அப்பாவை பார்த்தேன்..... I.C.U. கண்ணாடி கதவின் வழியாக!

அய்யோ அப்பா...............

அவரது உடலே இரணமாகி இருந்தது (பார்த்த என் மனதும் தான்). டாக்டரிடம் சென்று விசாரித்தேன். மூளையில் அடைப்பு உள்ளது, சில லட்சங்கள் ஆகும் என்றார். (என்னிடம் லட்சியங்கள் தானே உள்ளது: லட்சத்துக்கு எங்கே போவேன்)

ஊரிலோ மாமாவின் மரணம்... மருத்துவமனையிலோ அப்பாவின் மரண போராட்டம்...

டாக்டரிடம், நான் சென்னையிலே அப்பாவை பார்த்துக்கொள்கிறேன் என்றேன். ரூ.22,000 (ஒரு நாள் மருத்துவமனை செலவு) சொந்தங்களிடம் கடன் வாங்கி செலுத்தினேன்.
அன்று மதியம் சென்னைக்கு கிளம்பும் முன் ஊருக்குள் சென்று மாமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன்......

க்க்கூஊ .....க்க்கூஊ ... குச்ஹு .... குச்ஹு .... ரயில் கிளம்பியது... (கன்யாகுமரி விரைவு)

பாதி பயணத்தில் அப்பா துடி துடிக்க ஆரம்பித்து விட்டார்... எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. டி.டி ஆர் - இடம் ஓடினேன். இருவரும் ரயிலில் யாரவது டாக்டர் இருக்கிறாரா என்று தேடினோம். தெய்வமாய் ஒருவர் இருந்தார்.... உதவிகள் செய்தார்.

ஆனால், இதற்கு மேல் பயணம் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்? திருச்சி ரயில் நிலையத்துக்கு சொல்லிவிட்டோம். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்றனர்.

மணி நள்ளிரவு 12.45 .... திருச்சி அரசு மருத்துவமனை... பணியிலிருந்த பயிற்சி மருத்துவர்களிடம் போராடி அனுமதி கடிதம் வாங்கி, ரயில் துறை அதிகாரிகளிம் கெஞ்சி அடுத்த ரயிலில் சென்னை கிளம்பினோம். உதவிக்கு யாருமின்றி, எனக்கும் எமனுக்குமான அந்த போராட்ட நேரத்தில் அவர்கள் காட்டிய மனிதாபிமானம் மரணத்திலும் மறக்க முடியாதது..

இருப்பினும் காலதேவனை எங்களால் நீண்ட காலம் வெல்ல முடியவில்லை.
ஆம்! தோற்று விட்டோம். ( 08 அக்டோபர் 2006)

அம்மா மட்டுமல்ல அப்பாவும் எங்கள் உயிரில், உணர்வில் கலந்துவிட்டார்.

தாயும் தந்தையும் இன்று எங்களுக்கு குழந்தைகள்......

Saturday, September 20, 2008


என்னை தங்கள் கருவில் சுமந்து, இந்த மண்ணில் விதைத்த நல்ல உள்ளங்கள்.. அன்பான இதயங்கள்..!!


24 மே 2005:

என் வாழ்க்கை பயணத்தின் பாதைகள் திசை மாறிய நாள்......!!!!!!!!!!!!!!!!!!!!

அப்பாவின் அவசர தொலைபேசி அழைப்பை ஏற்று இரவில் வேலையை விட்டு அவசரமாக
வீடு திரும்பிய நான் கண்டது என் அன்பு அம்மாவின் மரணத்தை..... என்னை வேலைக்கு
அனுப்பிவிட்ட அம்மா சில மணிகளில் தன் வாழ்கையை முடித்துக்கொண்டார்.
அழுதேன்... புரண்டேன்...தட்டு தடுமாறி மெல்ல மெல்ல சுதரித்துகொண்டு வாழ்க்கையை
மீண்டும் ஆரம்பிக்கும்போது... புயலுக்கு பின் பூகம்பம்...

08-அக்டோபர்-06:

என் தந்தையின் மரணம்??????.... அம்மாவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல்
உள்ளுக்குள் தவித்துக்கொண்டு, எனக்கு மற்றொரு அம்மாவாக மாறி வாழ்ந்த
என் அப்பா
என் மடியிலேயே உயிர் விட்ட அந்த தருணத்தை நினத்தாலே பதறுகிறது என் மனது....!

இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கற்று கொண்ட பாடங்கள் ஏராளம்... யார் உண்மையான நட்பு,
நண்பர்கள், சொந்தம் என அனைவரை பற்றியும்
புரிந்துகொள்ள
அவர்களின் மரணம் இறைவனுக்கு காணிக்கை!!!!!!!


" ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! "


நான் இழந்தது பெற்றோர்களை மட்டுமல்ல; அவர்களின் அன்பு, நட்பு பாராட்டும் மனிதத்துவம்,
அனைவரையும் சொந்தமாய் பாவிக்கும் மனோபாவம் என பல நல்ல விஷயங்கள்...