
சென்ற வாரம் என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கி தனது வலது கையை இழந்து சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடவுளின் அனுஹிரகத்தால் நல்ல படியாக குணமாகிவரும் அவரை பைக்கில் சென்று நானும் மற்றொரு நண்பரும் பார்த்துவிட்டு, அப்படியே வழியில் (தி. நகர்) ஷாப்பிங் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நல்ல மழை! (ஹ்ம்ம்.... சென்னையிலும் ஒரு மழை காலம்?)
வண்டியை (அதாங்க நம்ம தேசத்தின் உயிர் துடிப்புனு டிவியில இந்திய அணி கிரிகெட் விளையாடும்போது அடிக்கடி விளம்பரம் போடுவாங்களே அந்த வண்டி தான்) தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓரம் கட்டிவிட்டு, மாமழையின் அழகை ரசித்து கொண்டிருந்த வேளையில்தான் அந்த கொடுமையை காண நேரிட்டது...????????
சற்று தூரத்தில்... நட்ட நடு சாலையில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்??? இரயில் பயணத்திற்காகவும், மழைக்காகவும் அங்கு நின்றுகொண்டிருந்த கூட்டத்தில் ஒருவருக்கு கூட அவருக்கு என்ன ஆயிற்று என்று கவனிக்கக்கூட மனமில்லை! (அந்த மாமழையாலும் அவர்களின் கல் மனதை கரைக்க முடியவில்லை போலும்? கண்ணீர் விட்டு கரைந்து கொண்டே இருக்கிறது!!!!!)
"சாலையோர மின்சாரக் கம்பத்தில் பட்டு
விழுந்து இறந்துபோன
ஏதோ ஒரு காக்கைக்காய்…
பல நூறு காக்கைகள்
அந்த இடத்தில் ஒன்றாய் கூடி
ஓயாமல் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கின்றன
யார் விரட்டியும் பறக்காமல்…
அதே மின்கம்பத்தில் இருந்து
வழுக்கி விழுந்து
இறந்துபோன சூசையை…
நின்று பார்க்ககூட
ஏனோ நேரமில்லை
மனமுமில்லை நமக்கு…
நட்டநடு சாலையில்
சட்டென ஓடிவந்து
வண்டிக்கிடையில் சிக்கி
சிதைந்துபோன நாயின்மேல்…
கூசாமல் மேலும் மேலும்
வண்டிகளை ஏற்றி
கடந்துபோகும் மனிதர்கள்…
கூடிய விரைவில்
சக மனிதர்களின் உடல்கள் மீதும்
வண்டிகளை ஏற்றி
தங்கள் பயணத்தை தொடர்ந்தால்
ஆச்சர்யப்படுவதற்க்கில்லை !
தினம் தினம்
புறப்பட காத்திருக்கும்
பேருந்து நிலையத்திலேயே…
நடக்க தெம்பின்றி
அங்கேயே தங்கி
பசியோடு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த
அந்த ஒல்லிக் கிழவன்…
இன்று அனாதையாய்
இறந்து கிடப்பதற்க்காய்
கொஞ்சம்கூட வருத்தமின்றி…
மூக்கைப் பொத்தி
அருவருப்போடு நாம்
நகர்ந்து நிற்கும் பொழுதில்தான்…
முழுதாய் நாறத் தொடங்குகிறது
நமது மனிதாபிமானம்!"
- (எங்கோ படித்த இந்த கவிதை, சட்டென்று தேவையில்லாமல் மனதில் கானல் நீராய் தோன்றி மறைந்தது)
மனதை எதோ நெருடியது போன்ற உணர்வு? நண்பனை துணைக்கு
அழைத்தேன். ஆளு செம மட்டை (போதை) போலிருக்கு, தன்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டான்.நண்பனே முடியாது என்றபோது வேறு யாரையும் எதிர்பார்க்க நினைப்பது மடத்தனம். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவரருகில் சென்றேன். கனமழையிலும் சுயநினைவின்றி கிடந்த அவரை தட்டி எழுப்பினேன்.
ம்ம்ம்ஹும்... ஆள் எழுந்திரிக்கவில்லை. மனதினுள் பயம் குடியேறியது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல தூக்கினேன். யப்பா!! செம கப்பு... (நண்பன் சொன்னது சரிதான்) இழுத்து (தூக்க முடியவில்லை) நடைபாதையின் ஓரமாக உட்கார வைத்தேன். வந்ததே கோபம்... திட்டிவிட்டேன்?! போதையிலும் எதோ காரணம் சொல்ல முயன்றார். எனக்குதான் புரியவில்லை... புரிந்துகொள்ளவும் மனமில்லை.
குடித்துவிட்டு இப்படி ரோட்டில் நடு கிடந்தால் என்னவாகும்? கார், லாரி என ஏதாவது உன் மேல் ஏறி விட்டால், உன்னையே நம்பியிருக்கும் உன் மனைவி, குழந்தைகள், பெற்றோர்களின் நிலை?????????
(எனது சிறு வயதில் இதேபோல் ஒரு சம்பவம் : சற்று நடுத்தர மனிதர் ஒருவர் இப்படிதான் தெருவில் விழுந்து கிடந்தார். அனைவரும் போதை மயக்கம் என்று விலகி சென்றபோது என்னோட அப்பா அருகில் சென்று தண்ணீர் தெளித்து எழுப்பியபோது தான் தெரிந்தது. அது போதை மயக்கமல்ல. குறைந்த இரத்த அழுத்ததால் (LOW B.P.) வந்த மயக்கம் என்று)
விழுந்து இறந்துபோன
ஏதோ ஒரு காக்கைக்காய்…
பல நூறு காக்கைகள்
அந்த இடத்தில் ஒன்றாய் கூடி
ஓயாமல் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கின்றன
யார் விரட்டியும் பறக்காமல்…
அதே மின்கம்பத்தில் இருந்து
வழுக்கி விழுந்து
இறந்துபோன சூசையை…
நின்று பார்க்ககூட
ஏனோ நேரமில்லை
மனமுமில்லை நமக்கு…
நட்டநடு சாலையில்
சட்டென ஓடிவந்து
வண்டிக்கிடையில் சிக்கி
சிதைந்துபோன நாயின்மேல்…
கூசாமல் மேலும் மேலும்
வண்டிகளை ஏற்றி
கடந்துபோகும் மனிதர்கள்…
கூடிய விரைவில்
சக மனிதர்களின் உடல்கள் மீதும்
வண்டிகளை ஏற்றி
தங்கள் பயணத்தை தொடர்ந்தால்
ஆச்சர்யப்படுவதற்க்கில்லை !
தினம் தினம்
புறப்பட காத்திருக்கும்
பேருந்து நிலையத்திலேயே…
நடக்க தெம்பின்றி
அங்கேயே தங்கி
பசியோடு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த
அந்த ஒல்லிக் கிழவன்…
இன்று அனாதையாய்
இறந்து கிடப்பதற்க்காய்
கொஞ்சம்கூட வருத்தமின்றி…
மூக்கைப் பொத்தி
அருவருப்போடு நாம்
நகர்ந்து நிற்கும் பொழுதில்தான்…
முழுதாய் நாறத் தொடங்குகிறது
நமது மனிதாபிமானம்!"
- (எங்கோ படித்த இந்த கவிதை, சட்டென்று தேவையில்லாமல் மனதில் கானல் நீராய் தோன்றி மறைந்தது)
மனதை எதோ நெருடியது போன்ற உணர்வு? நண்பனை துணைக்கு
அழைத்தேன். ஆளு செம மட்டை (போதை) போலிருக்கு, தன்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டான்.நண்பனே முடியாது என்றபோது வேறு யாரையும் எதிர்பார்க்க நினைப்பது மடத்தனம். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவரருகில் சென்றேன். கனமழையிலும் சுயநினைவின்றி கிடந்த அவரை தட்டி எழுப்பினேன்.
ம்ம்ம்ஹும்... ஆள் எழுந்திரிக்கவில்லை. மனதினுள் பயம் குடியேறியது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல தூக்கினேன். யப்பா!! செம கப்பு... (நண்பன் சொன்னது சரிதான்) இழுத்து (தூக்க முடியவில்லை) நடைபாதையின் ஓரமாக உட்கார வைத்தேன். வந்ததே கோபம்... திட்டிவிட்டேன்?! போதையிலும் எதோ காரணம் சொல்ல முயன்றார். எனக்குதான் புரியவில்லை... புரிந்துகொள்ளவும் மனமில்லை.
குடித்துவிட்டு இப்படி ரோட்டில் நடு கிடந்தால் என்னவாகும்? கார், லாரி என ஏதாவது உன் மேல் ஏறி விட்டால், உன்னையே நம்பியிருக்கும் உன் மனைவி, குழந்தைகள், பெற்றோர்களின் நிலை?????????
குடி.. ஆனால் அந்த குடி உன் குடும்பத்தைஅழிக்காமல் பார்த்துக்கொள்!
(எனது சிறு வயதில் இதேபோல் ஒரு சம்பவம் : சற்று நடுத்தர மனிதர் ஒருவர் இப்படிதான் தெருவில் விழுந்து கிடந்தார். அனைவரும் போதை மயக்கம் என்று விலகி சென்றபோது என்னோட அப்பா அருகில் சென்று தண்ணீர் தெளித்து எழுப்பியபோது தான் தெரிந்தது. அது போதை மயக்கமல்ல. குறைந்த இரத்த அழுத்ததால் (LOW B.P.) வந்த மயக்கம் என்று)

